October 02, 2010

ஜனத்தொகை

இந்தியாவின்
ஜனத்தொகை குறைப்பு
கண்ணீரால் அணைக்கப்படும்
நெருப்பு!!!!

கண்ணீர்

நீ
என்னை விட்டு பிரிந்தாலும்
என்னை மறந்தாலும்
என்றாவது ஒரு நாள்
என் நினைவு வரும்போது
உன் கண்களில் நான் இருப்பேன்
கண்ணீராக!!!

இதயம்

சுகமாய் துடித்தது-
உன்னை நினைத்தபொழுது;
துடிக்க மறந்தது
உன்னை மறந்த பொது!!!!

நட்பு

வேர் இல்லா செடிகளில்
பூக்கள் முளைப்பதில்லை;
வேட்கை இல்லா இதயத்துக்கு
வெற்றி கிடைப்பதில்லை;
நம்பிக்கை இல்லா இதயத்தில்
நட்பு மலருவதில்லை...

மத பிரிவினை

காக்கை குருவி எங்கள் ஜாதி
பேதம் இல்லை என்போர் மீதி
மேலோர் கீழோர் என மக்களிடமே
பிரிவினை கண்டோர் மீதி

இறப்பு

உன் நினைவுகளில்
திரிந்த நான்
இப்போது
உன்னில் மட்டுமே
நினைவுகளாய் வாழ்கிறேன்

முதல் கவிதை..

உன் பிரிவால்
என் கண்கள்
உப்புக்கு வரி கட்டின!!!